Friday, March 5, 2010

நித்தியானந்தர் - கதவை திறந்தவர்

-------------------------------------------------------------------------------


இங்கு அனைவருக்கும், ஏதாவது பிரச்சனை இருக்கிறது. அதை எப்பிடியாவது தீர்க்க வேண்டும்.
யார் எதை சொல்வார்கள், எதை தின்றால் பித்தம் தெளியும். இப்படி அலைபவர்கள்தான் நித்தியானந்தன் போன்றவர்களின் குறி.

இங்கு பிரச்சனையே!!! கடவுளை நம்மால் எளிதாக வரையுறுத்து விடமுடியாது. என்பதுதான்.

" தடி எடுத்தவன் தண்டல் காரன்" என்பது எங்கு பொருந்துகிறதோ இல்லையே, ஆன்மிகத்தில் கச்சிதமாக பொருந்தும்.சற்று வார்த்தை ஜால திறமையும், நல்ல நூலரிவும் போதும். கடவுளையும், கடவுள் சார்ந்த விஷயங்களுக்கும் வைத்து ஏமாற்ற.
எதை வேண்டுமானாலும் சொல்லலாம், ஏன் என்று கேட்க ஆள் இல்லை.

கடவுளை உணர்வதும், அந்த உணர்வை, அந்த அனுபவத்தை எழுதுவதும் தவறேதும் இல்லை. அவர்கள் செய்வது தத்துவ விசாரணை அல்லது பக்தி நூல் என்ற அளவில் பார்க்க படும்.

ஆதி சங்கரர் முதல் ரமண மகரிஷி வரை, இந்து சமயம் தந்த அத்துணை மகான்களும், தம்மை கடவுள் என்று சொல்லி கொண்டதில்லை.

ஆனால் நான்தான் கடவுள் என்பவர்களை எதை கொண்டு வேணாலும் அடிக்கலாம்.

"இவர்களுக்கு பின்னால் செல்பவர்கள் ஒன்று கேவலமான காரியவாதியாக இருப்பார்கள் இல்லை முட்டாளாக இருப்பார்கள்."

ஏ அப்பா!!!! எத்தனை பேர்... அவர் புகழ்பாடிகள்

குமுதம்... எழுத்தாளர் சாரு.. விஜய் டிவி ... யாருக்கும் துளியும் வெட்கம் இல்லை!!! இவ்வளவு நடந்த பின்பும் தன் வாசகர்களிடம் ஒரு சம்பிரதாய மன்னிப்பு கூட இல்லை...

எழுத்தாளர் சாரு, எவ்வளவு எழுதினார்? அப்பப்பப்பா!!!! இதிகாசம், புராணங்களை மிஞ்சி விட்டது.

கடவுளை கண்டாராம்.. எவ்வளவு பொய்!!! பினநவீனத்துவம் என்றால் இதுதான் போலிருக்கிறது.

நித்தியானந்தர் செய்தது பாவம் என்றால், அதில் இவர்களுக்கும் பங்கு வரும்.

தான் ஒரு கடவுள் என்பதை, எந்த கடவுள் இப்படி விளம்பரம் செய்து கொள்வார்.

சாரு எழுதுகிறார்.. நித்தியானந்தர் எங்கோ பெங்களூரில் இருந்து கொண்டு, சென்னையில் ஒரு நோயாளியின் உடம்பில் புகுந்து, அவருடைய தீர்க்க முடியாத நோயை குணப்படுத்தின்னாராம்.. ஏன் camera வைத்தது தெய்ரியவிலையோ !!! அத்தனையும் ஏமாற்று வேலை....

இப்போது ஏதேதோ சால்ஜாப்புகள்...


சாரு உங்களுக்கு ஒரு கேள்வி: இதையே வேறு யாராவது செய்திருந்தால் நீங்கள் என்ன சொல்லிருப்ப்ர்கள்?

என்னை கேட்டால் உடற்பயிற்சி செய்வது உண்மையாகலாம். இந்த யோகா ... தியானம் ... இதெல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை.

நல்ல அமைதியான தூக்கம். ... தனிமையில் நல்ல இசை .. இது போதும் எந்த stress யும் குறைக்க... சிவா ராத்திரி speacial கோர்ஸ் ஆம்... எவ்வளவு ஏமாற்று வேலை.


கடவுளை கண்கள் கொண்டு தேடுவது, நாம் படித்த, பார்த்த கதைவடிவகளின் எச்சம்...


கடவுளை உருவமாக மட்டும் தேடாதீர்... அவர் நிகழ்வுகளில் இருக்கிறார்.


சாமியார்கள் கடவுளின் நேரடி agent கள் அல்ல.....
நம் கடவுளிடம், நாம் நேரடியாக பேசுவோம்... இடைதரகர் எதற்கு?


நித்தியானந்தர் மீது கோப பட எதுவும் இல்லை. அவர் காலில் விழுந்து கிடந்தவர்களை கண்டு பரிதாப படலாம்!!!

7 comments:

ராம்ஜி_யாஹூ said...

அருமை,

வேறு ஒரு எழுத்தாளர் நித்தி புகழ் படி இருந்து இருந்தால், இன்று சாரு சிவா தாண்டவம் ஆடி இருப்பார்.

நிலாமதி said...

உங்கள் கருத்து மிகவும் சரி. உங்கள் ஆக்கத்துக்கு நன்றி

Kanagu said...

பிண்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பர்களே !!!

Anonymous said...

You can not say Yoga & meditation are fraud...Do you know how many people in western countries are now practicing these daily? Just a question: Dont blame these life sciences just for the reason that the teacher who teaches them are not personally clean....

Charles Babbage said...

Hi Rasu,

Extremely sorry for say this. Everyone saying like this.... but no one asking before and how to avoid like this. Every people want that one. No need for கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்.

By
Dhamu

Anonymous said...

Neenga ellarume intha BlOG ingra roomla irunthu enna kathinalum...yarukkum puriyaporathila....


If you observe, intha blog vanthavanga ellame konjam matured ana vanga than, athavathu they cant be easily cheated....so thevayana exposure thevayanavangaluku reach arathe illa...athuku ethavathu puthusa try panna innum nalla irukum....

Kanagu said...

பின்னூட்டதிற்கு நன்றி நண்பர்களே !!!!

EC நீங்கள் சொல்வது உண்மைதான்!!!

Post a Comment